சென்னையில் நாளை மறுநாள் (ஜனவரி 16ம் தேதி) இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
வரும் ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட இறைச்சி கடைகளை திறக்க கூடாது. மேலும், இந்த உத்தரவை மீறி சட்ட விரோதமாக இறைச்சி விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.