பெண்ணுரிமைக்கு முன்னுரிமை இல்லை: தாலிபான் திட்டவட்டம்!

காபூல்: தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஒரு அறிக்கையில், பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை தளர்த்துவது இப்போது முக்கியமான விஷயம் இல்லை என்று கூறியதாக காமா பிரஸ் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய சட்டத்தை மீறும் எந்தவொரு செயலையும் அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான் சனிக்கிழமை கூறியது.மேலும் பெண்கள் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்த கவலைகள் நாட்டில் நிறுவப்பட்ட குழுவின் விதிகளின்படி கையாளப்படும் எனவும் உறுதிபடுத்தப்பட்டது.

தலிபான் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஒரு அறிக்கையில், “இஸ்லாமிய எமிரேட் அனைத்து விஷயங்களையும் இஸ்லாமிய ஷரியாவின்படி ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறது, மேலும் நாட்டில் ஷரியாவுக்கு எதிராக செயல்படுவதை ஆளும் அரசாங்கம் அனுமதிக்க முடியாது” என்று காமா பிரஸ் தெரிவித்துள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிவதைத் தடைசெய்யும் தலிபான்களின் சமீபத்திய நடவடிக்கை, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பெண் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பெண் ஆர்வலர்களின் எதிர்ப்பைத் தூண்டியது. அத்துடன் உலகளவில் கண்டனங்களைக் கொண்டு வந்தது.

மேலும் படிக்க | காபூலில் ஒரு ‘26/11’ தாக்குதல்; ஹோட்டலின் ஜன்னல்களில் இருந்து குதிக்கும் மக்கள்!

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐக்கிய நாடுகள் (UN), OIC மற்றும் பிற சர்வதேச உதவி அமைப்புகள் உட்பட சில வெளிநாட்டு அரசுகள், இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்து, தலிபான் அரசாங்கத்தை நீக்குமாறு வலியுறுத்தின. ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்கள் கல்வியைத் தொடரவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றவும் உள்ள தடையை நீக்கி  அனுமதி அளிக்க வேண்டும் என்று உலக நாடுகள் பல வலியுறுத்துகின்றன என காமா பிரஸ் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டில் வெளியிடப்பட்ட யுனிசெஃப் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் இடைநிலைக் கல்வி கூட கற்க முடியாத நிலையில், கடந்த 12 மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தில் குறைந்தது 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வீணடிக்கப்பட்டுள்ளது என்றும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாகும். எனவும் கூறப்படுகிறது.

ஜபியுல்லா முஜாஹித், ஆப்கானிஸ்தானில் உள்ள ஆன்மீக கோரிக்கைகளைப் புரிந்து கொள்ளவும், மனிதாபிமான உதவிகளை அரசியலுடன் பிணைப்பதைத் தவிர்க்கவும் ஆப்கானிஸ்தானின் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச உதவி அமைப்புகளை கேட்டுக் கொண்டார் என்று காமா பிரஸ் மேலும் தெரிவித்துள்ளது.

ஜனவரி 13 அன்று, 11 நாடுகள் ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகத்தை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி, கல்வியைப் பெறவும் வேலைக்குத் திரும்பவும் அனுமதி வழங்கி, அவர்கள் பொது வாழ்க்கைக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டு என வலியுறுத்தியது.

இருப்பினும், தலிபான் அதிகாரிகள் நாட்டில் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நடமாட்டம் தொடர்பான அவர்களின் கடுமையான கொள்கையில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை. இதற்கிடையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை நடத்துவது இஸ்லாத்தின் ஷரியா சட்டத்திற்கு உட்பட்டது என்ற தலிபான்களின் கூற்றை நிராகரித்தது.

OIC பலமுறை தலிபான் அதிகாரிகளிடம் பாலின அடிப்படையிலான கட்டுப்பாடுகளை நீக்கி, ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்ளார்ந்த அடிப்படை உரிமைகளில் இருந்து பயனடையவும், கல்வி, வேலை மற்றும் பொது சூழலில் தோன்றவும் அனுமதிக்க வேண்டும் என கோரி வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்த இந்தியாவிற்கு முழு ஆதரவு: தலிபான் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.