Bigg Boss 6: புதிய முறையில் எவிக்டான நந்தினி… சூசமாக வீன்னரை அறிவித்த பிக்பாஸ்…

Bigg Boss Season 6 Winner: பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் 6ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் 103ஆவது நாள் எபிசோட் நேற்று ஒளிபரப்பான நிலையில், அதில் கடைசி 4 போட்டியாளர்களாக விக்ரமன், அசீம், ஷிவின், மைனா நந்தினி ஆகியோர் உள்ளனர். பிக்பாஸில் இதுவரை இல்லாத மிட் வீக் எவிக்ஷன் என்ற புதுமுறை கடைபிடிக்கப்பட்டது. 

இந்த எவிக்ஷன் முறையில் ஒரு லிப்ட் போன்ற ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மேல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இறுதி 4 போட்டியாளர்களை ஒவ்வொருவராக அழைத்து நிற்கவைக்கப்பட்டனர். முதலில், விக்ரமன் அளிக்கப்பட்டு ஒருமுறை மேல் இருந்து கீழ்வரை இறக்கப்பட்டு, சற்று நேரத்திற்கு பின் மீண்டும் மேல அழைத்துவரப்பட்டார். அதன் அவரை மேடையை விட்டு கீழே இறங்கி தரைக்கு வருமாறு அழைக்கப்பட்டார். அதன்பின், நந்தினி அழைக்கப்பட்டு விக்ரமனை போல் ஒருமுறை கீழிறக்கப்பட்டு, மீண்டும் மேலே கொண்டுவரப்பட்டார். பின்னர் அவரும் தரைக்கு வரவழைக்கப்பட்டார். 

‘கெட்டவனு பெயர் எடுத்த நல்லவன்டா’

இதையடுத்து, மூன்றாவதாக அசீமை அழைத்து பிக்பாஸ் மேடையில் நிற்க வைத்தார். ஆனால், விக்ரமன், நந்தினி போல் அல்லாமல் இரண்டு முறை கீழிறக்கப்பட்டு மேல கொண்டுவரப்பட்டார். பின்னர் தரைக்கு வந்த அவர், ‘எனக்கு பலம் ஏன் ரசிகன்டா, கெட்டவனு பெயர் எடுத்த நல்லவன்டா” என சிம்புவின் சிலம்பாட்டம் பட பாடலை பாடிக்கொண்டே வந்தார். மேலும், நான்காவதாக சென்ற ஷிவினை மூன்று முறை கீழே இறக்கி, மேலே ஏற்றினர். இதில், மூன்றாவது முறை கீழே இறக்கப்பட்டபோது அவர் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ஹவுஸ்மேட்ஸ் பயந்தனர். 

ஆனால்,  ஷிவின் மீண்டும் அதே லிப்டில் மேலே வந்தார். தொடர்ந்து, தரைக்கு அழைக்கப்பட்ட பின்னர்தான் ஷிவின் வெளியேற்றப்படவில்லை என தெரிந்தது. இதையடுத்து, நந்தினியை மீண்டும் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் அவரை லிப்டில் ஏற்றினர். 

மைனா வெளியேற்றம்

முதலில், கீழே சென்றுவிட்டு மேலே வந்தபோது, மைனா அந்த லிப்டில் இருந்தார். பின்னர், இரண்டாம் முறை லிப்ட் கீழே இறங்கி மேலே வந்தபோது, அதில் நந்தினி இல்லை. இதன்மூலம், அவர் வெளியேற்றப்பட்டது தெரியவந்தது. அதனை பிக்பாஸ் உறுதிப்படுத்தினார். மிட் விக் எவிக்ஷன் பிராசஸில் மைனா நந்தினி  வெளியேற்றப்பட்டார்.  

Azeem

இதுஒருபுறம் இருக்க, இந்த டாஸ்க் மூலம் மறைமுகமாக வெற்றியாளரை பிக்பாஸ் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஷிவினை மொத்தமாக மூன்று முறை கீழே இறக்கப்பட்டு மேலே கொண்டுவந்தனர். அசீமை இரண்டு முறையும், விக்ரமனை ஒருமுறையும் லிப்டில் கீழே இறக்கி மேலே கொண்டுவந்தனர். இதன்மூலம், மூன்று முறை கீழே இறக்கப்பட்ட ஷிவின் மூன்றாம் பரிசையும், இரண்டு முறை கீழே இறக்கப்பட்ட அசீம் மூன்றாம் இடத்தையும், ஒரே ஒரு முறை கீழே இறக்கப்பட்ட விக்ரமன் முதலிடத்தையும் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Vikraman

இருப்பினும் யார் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இன்று இரவுக்குள் ஏறத்தாழ வெற்றியாளர் யார் என்பது உறுதியாகிவிடும் என்றாலும், ஞாயிற்றுக்கிழமை தான் யார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.