காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து. இவருடைய மகன் நரேஷ் (40) சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நரேஷுக்கும், அதே நிறுவனத்தில் வேலை பார்த்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் திடீரென இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து அந்த இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து, வீரப்பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இதையறிந்த நரேஷ், வீரப்பெருமாநல்லூருக்கு சென்றுள்ளார். பின்பு காதலியை மறக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்த நரேஷ் அதே பகுதியில் தற்கொலை செய்து கொள்வதற்காக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நரேஷ் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், நரேஷின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.