நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய கோவிட்-19 நெறிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதியளித்துள்ளது.
நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய கோவிட் நெறிமுறைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
புதிய நெறிமுறைகள்
இருப்பினும் பின்னர் குறித்த நெறிமுறைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது எந்த புதிய கோவிட்-19 நெறிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறான நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுமாயின், அதனை சுகாதார அமைச்சினால் மேற்கொள்ள வேண்டும் எனவும் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.