மதுரை: அரசு ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28ந்தேதி அரசு ஊழியர்கள் மண்டல அளவில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிதி ஆதாரம் இல்லாததால், பழைய ஓய்வூதியத் […]