சொற்ப இலக்கை கடைசி பந்துவரை சென்று போராடி வென்ற இந்திய அணி


லக்னோவில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

100 ஓட்டங்கள் இலக்கு

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி ஆமைவேக ஆட்டத்தினால் 20 ஓவரில் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக சாப்மன் மற்றும் பிரேஸ்வெல் 14 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்திய அணியின் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எளிய இலக்கை இந்திய அணி விரைவில் எட்டிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியும் ஓட்டங்களை எடுக்க தடுமாறியது.

ராகுல் திரிபாதி/Rahul Tripathi

@BCCI (Twitter)

ஆட்டநாயகன் சூர்யகுமார்

19.5 ஓவர் வரை சென்ற இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 26 ஓட்டங்கள் எடுத்தார்.

மேலும் அவரே ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.    





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.