உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதியதை அடுத்து விமானம் லக்னோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் ஏசியா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் விமானம், 170 பயணிகளுடன் லக்னோவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் மீது பறவை ஒன்று மோதியது.
உடனடியாக விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டு, தரையிறக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது.