‘மோடியை தவிர வேறு எந்த பிரதமரும் தன்னை அமைச்சராக்கியிருக்க மாட்டார்கள்’ – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பிரதமர் மோடியை தவிர வேறு எந்த பிரதமரும் தன்னை அமைச்சராக்கியிருக்க மாட்டார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வெளியுறவுத்துறை செயலாளராக வரவேண்டும் என்பதே தனது லட்சியத்தின் எல்லை என்றும், அமைச்சராக வேண்டும் என்று தான் கனவில்கூட நினைத்ததில்லை என்றும் தெரிவித்தார்.

மோடி பிரதமராக இல்லாவிட்டால் அரசியலுக்கு வர தனக்கு தைரியம் இருந்திருக்குமா என்று சில நேரங்களில் தன்னை தானே கேட்டுக்கொள்வதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.