30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் – தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரனும், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலனும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பழனி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்து அறநிலையத் துறை ஆணையராக இருந்த குமரகுருபரன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலராக மாற்றப்பட்டு உள்ளார்.

பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி மாவட்ட ஆட்சியராக ஷாஜிவாணா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். கோவை ஆட்சியராக கிராந்தி குமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.