மத்திய பட்ஜெட்டை உலகமே உற்று நோக்குவதாக பிரதமர் பேச்சு

நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டை உலகமே உற்றுநோக்குவதாகவும், சாமானிய மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த பிரதமர், குடியரசுத்தலைவராக பழங்குடியின பெண் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியது, அரசியலமைப்புக்கே பெருமை என்றார்.

மேலும், நாட்டிற்கும், மக்களுக்கும் முன்னுரிமை என்ற நோக்கத்துடன் கூட்டத்தொடர் முன்னெடுக்கப்படும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது ஆக்கப்பூர்வ கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.