எல்லை நிர்ணய நடவடிக்கைகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எந்த வகையிலும் பாதிக்காது என எல்லை நிர்ணய சபையின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சிக்கல் இல்லை
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய சபையின் அறிக்கை மார்ச் மாதம் 9ம் திகதிக்கு பின்னரே ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லை நிர்ணய சபையின் செயற்பாடுகளினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடாத்துவதற்கு எந்த சிக்கல்களும் உருவாகப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.