துருக்கியில் சிரிய எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் மீட்கப்படவுள்ள நிலையில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது.
அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலையில் 6.0 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.
துருக்கி – சிரியா ஆகிய இரண்டு நாடுகளுமே இந்த நிலநடுக்கங்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா உட்படப் பல நாடுகளும் இந்த இரு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்திருக்கின்றன.
இந்த நிலநடுக்கங்களால் பல கட்டடங்கள் மொத்தமாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர், கிலிஸ் ஆகிய 10 நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் லெபனான், சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.
இது துருக்கி வரலாற்றில் மிகவும் மோசமான நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
1999-ல் துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 17,000-க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. (1999-ல் எடுக்கப்பட்ட படம்)