Dhanush:ரஜினி மகளை கட்டிக்கிட்டு இப்படி பொய் சொல்லக் கூடாது தனுஷ்: நெட்டிசன்ஸ் விளாசல்

Dhanush vaathi event speech: வாத்தி நிகழ்ச்சி மேடையில் தனுஷ் ஃபீல் செய்து பேசிய விஷயத்தை பொய் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

வாத்திவெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படம் பிப்ரவரி 17ம் தேதி அதாவது நாளை ரிலீஸாகவிருக்கிறது. அந்த படம் தெலுங்கில் சார் என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நடந்த வாத்தி இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், ஆசிரியராக இருப்பது ரொம்ப கஷ்டம் என்பதை இந்த படத்தில் நடித்தபோது புரிந்து கொண்டேன் என்றார். மேலும் பண விஷயம் பற்றி அவர் பேசியது தான் சர்ச்சையாகிவிட்டது.
தனுஷ்அப்பா, அம்மா பீஸ் கட்டிவிடுவார்கள் என்று ஜாலியாக சுற்றித் திரிந்தேன். தற்போது என் மகன்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டும்போது தான் அந்த கஷ்டம் புரிகிறது என்று மேடையில் தனுஷ் பேசினார். அது பற்றி தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். பல கோடி சம்பளம் வாங்கும் உங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவது பிரச்சனையே இல்லை என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

ரஜினிசமூக வலைதளவாசிகள் மேலும் கூறியிருப்பதாவது, அப்படியே உங்களிடம் பணம் இல்லாவிட்டாலும் தாத்தா ரஜினிகாந்த் தன் பேரன்களுக்காக ஃபீஸ் கட்டிவிடுவார். அவரிடம் இல்லாத பணமா?. ரஜினி மகளை திருமணம் செய்துவிட்டு பண பிரச்சனை பற்றி நீங்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. பொய் சொன்னாலும் இப்படி எல்லாம் சொல்லக் கூடாது என்கிறார்கள்.
காதலிவாத்தி விழா மேடையில் தனுஷ் பேசிய மற்றொரு விஷயமும் பிரச்சனையானது. காதலியுடன் நேரம் செலவிட டியூஷனில் சேர்ந்தேன். அங்கு வாத்தியார் கேட்ட கேள்விகளுக்கு பதிலே தெரியவில்லை. இதையடுத்து டியூஷனில் இருந்து நின்றுவிட்டேன். இருப்பினும் டியூஷனுக்கு வெளியே பைக்கில் ஹார்ன் அடித்து என் காதலிக்கு சிக்னல் கொடுத்தேன். அது அந்த ஆசிரியருக்கு புரிந்துவிட்டது என்றார்.
கூத்தாடிவெளியே ஹார்ன் அடிக்கிறவன் எதிர்காலத்தில் நடுத்தெருவில் கூத்தாடத் தான் போகிறான் என்று அந்த ஆசிரியர் கூறியிருக்கிறார். அவர் எந்த நேரத்தில் சொன்னாரோ அது நடந்துவிட்டது. தமிழ்நாட்டில் நான் கூத்தாடாத தெருவே இல்லை. நமக்கென்ன ராஜா மாதிரி இருக்கிறேன் என்று கெத்தாக பேசினார் தனுஷ்.
விளாசல்சும்மாவே மாணவர்கள் ஆடுகிறார்கள். இதில் நீங்கள் வேறு இப்படி பேசி அவர்களை ஊக்கிவிக்கிறீர்களே. நீங்கள் மேடையில் எதையாவது சொல்லிவிட்டுச் சென்றுவிடுவீர்கள். பசங்க அதையே பிடித்துக் கொண்டு படிக்காமல் போய்விடுவார்கள். பெத்தவங்க படும் கஷ்டம் தான் வீணாகும் என பிள்ளைகளை பெற்றவர்கள் தனுஷை விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

​Dhanush: தனுஷ் பேச்சால் பிரபல வாத்தி அதிருப்தி: மைக் கிடைச்சா எது வேணும்னாலும் பேசுவதா எனும் நெட்டிசன்ஸ்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.