இலங்கை உட்பட்ட பல நாடுகளுக்கு நிதியுதவி: முதல் மெய்நிகர் கூட்டம் இன்று


இலங்கை உட்பட்ட பல நாடுகளின் கடன்கள் தொடர்பில் ஆராயும் புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கூட்டம் நடைபெறவுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (17.02.2023) நடைபெறும் இக் கூட்டத்தில்,  சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

மேலும் இந்தக் கூட்டம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் 20 குழுவின் தற்போதைய தலைமை நாடான இந்தியா ஆகிய தரப்புக்களால் இணைந்து எதிர்வரும் 23 முதல் 25ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ள வட்டமேசை நேரில் சந்திப்புக்கு முன்னோடியாக இடம்பெறுகிறது.

இலங்கை உட்பட்ட பல நாடுகளுக்கு நிதியுதவி: முதல் மெய்நிகர் கூட்டம் இன்று | Debt Roundtable S First Virtual Meeting

சீனா, இந்தியா, சவுதி அரேபியா

எத்தியோப்பியா, சாம்பியா மற்றும் கானா ஆகிய 20 பொதுவான கட்டமைப்பின் கீழ்
கடன்களைக் கோரிய நாடுகளின் அதிகாரிகளும், தங்கள் சொந்த கடன் நெருக்கடிகளை
எதிர்கொண்டுள்ள இலங்கை, சுரினாம் மற்றும் ஈக்வடார் போன்ற நடுத்தர வருமான
நாடுகளின் அதிகாரிகளும் இந்த வட்ட மேசை சந்திப்பில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த கூட்டங்களில் முறையான ஆரம்பம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டங்கள் நடைபெறுவது முக்கியத்தும் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.