Smartphone பயன்படுத்தியதால் கண் பார்வை இழந்த பெண்! கண்களை பாதுகாப்பது எப்படி? ஸ்மார்ட்போன் டிப்ஸ்!

மக்கள் படிப்படியாக முழு டிஜிட்டல் உலகிற்கு மாறுவதால் அதை சார்ந்த பொருட்களின் பயன்பாடும் அதிகரித்தவாறே உள்ளது. குறிப்பாக மக்கள் கைகளில் ஸ்மார்ட்போன்களின் புழக்கம் மிகவும் அதிகரித்துவிட்டது. ஆனால் இதன் காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறினால் நம்பமுடிகிறதா?.

நிச்சயமாக உங்களின் உடலுக்கு ஸ்மார்ட்போன்களால் பாதிப்பு ஏற்படும். அதிலும் குறிப்பாக உங்களின் கண்கள் தொடர்ந்து பலமணிநேரம் ஸ்மார்ட்போன் திரையை பார்ப்பதால் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும். அப்படி ஐதாராபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கு அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக தலை வலி, மயக்கம் மற்றும் தற்காலிகமாக கண் பார்வை பறிபோயுள்ளது.

ஸ்மார்ட்போன்களால் நமது கண்களுக்கு நேரடியாக ஆபத்து இருப்பதாக எந்த ஒரு தரவுகள் மற்றும் ஆதாரங்கள் இல்லை என்றாலும் அதிலும் அளவிற்கு மீறினால் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். இதனால் நமது கண்களை எப்படி பாதுகாப்பாக வைப்பது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

முழு Black நிறத்திற்கு மாறுங்கள்

உங்களின் ஸ்மார்ட்போன்களின் கருப்பு நிற Wallpaper மற்றும் AMOLED ஸ்க்ரீன் போன்றவற்றை வைப்பதன் மூலமாக உங்கள் கண்கள் அதிகப்படியான வெளிச்சத்தை பார்க்காது. மேலும் இரவு நேரங்களில் Dark Mode, Extra Dim மற்றும் Night Light போன்றவற்றை பயன்படுத்தி நமது கண்களுக்கு எந்த ஒரு கடினமான வேலை அல்லது அழுத்தத்தை தராமல் தவிர்க்கலாம்.

கிளாஸ் பயன்படுத்தலாம்

நாம் அலுவலகங்களில் கணினி சம்பந்தப்பட்ட வேலைகள் செய்தால் அதிக நேரம் நாம் கம்ப்யூட்டர் பார்க்கவேண்டும். இதனால் நமது கண்களுக்கு அதிக வேலை மற்றும் அழுத்தம் தருகிறோம். இதை தடுக்க இப்போது கடைகளில் விற்பனை செய்யப்டும் Computer Glass பயன்படுத்துவதால் நமது கண்களை பாதுகாக்கலாம்.

குறைவான நேர பயன்பாடு

நமது கண்களை பாதுகாக்க Digital Wellbeing மற்றும் Apple Screen Time போன்ற ஆப் பயன்படுத்தி நமது ஸ்மார்ட்போன்கள் தானாக Off ஆகும் வகையில் அல்லது நமக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வைக்கலாம்.

டிஸ்பிலே மாற்றங்கள்

உங்களின் ஸ்மார்ட்போனில் இருக்கும் Text, Display மற்றும் கலர் போன்றவற்றை உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிவைத்துக்கொள்ளுங்கள். உதரணமாக உங்களுக்கு தேவையான கலர், Text அளவு போன்றவற்றை வைத்துக்கொண்டால் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

20/20 முறை

எப்போதும் அதிக கணினி அல்லது ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்கள் 20/20 என்ற விதியை பின்பற்றவேண்டும். அதாவது ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை ஓய்வு எடுக்கவேண்டும். ஓய்வு நேரத்தில் 20 அடிக்கு மேல் இருக்கும் எதாவது ஒரு பொருளை 20 நொடிகள் பார்க்கவேண்டும். அடிக்கடி கண்களை சிமிட்டவேண்டும். இது எல்லாம் உங்களின் கண்களை பாதுகாக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.