வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரசார் பாரதிக்கு தனியாக ஓ.டி.டி. தளம் துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் பல மாற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் தியேட்டரில் படங்கள் பார்ப்பது மாறி, தற்போது ஓடிடி தளங்களில் படம் பார்ப்பதும் , வெப் சீரிஸ்களும் அதிகளவு வரத்தொடங்கியுள்ளதால், ஓடிடி தளங்களில் ரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனர்.
இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலர் கூறியது, பிரசார் பாரதியின் கீழ் உள்ள அகில இந்திய வானொலி , தூர்தர்ஷன் ஆகியவற்றுக்கென 2023-24ல் தனியாக ஒ.டி.டி. தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவற்றின் உள்கட்டமைப்பையும், பார்வையாளர்களையும் அதிகரிக்க இயலும்..இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement