அடுத்தப்பட பணியில் இறங்கிய வினோத்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அதன்பின் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். துணிவு படத்திற்கு பின் கமலை வைத்து ஒரு படத்தை வினோத் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதோடு தனுஷிற்கும் ஒரு கதை சொல்லி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தனது அடுத்தப்பட வேலையில் வினோத் இறங்கி உள்ளார்.

சமீபத்தில் நடிகர் கமலை சந்தித்து பேசி உள்ளாராம் வினோத். அப்போது இவர்கள் இணையும் படம் பற்றி விவாதித்தாக தெரிகிறது. அப்போது அதை முழு படமாக்க கமல் சம்மதம் சொல்லிவிட்டாராம். இதையடுத்து இந்த படத்திற்கான திரைக்கதை உள்ளிட்ட முன்கட்ட பணிகளை வினோத் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.