சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாமூல் தராததால் மளிகைக் கடைக்காரர் மற்றும் அவரது தம்பியை 4 ரவுடிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது வீட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பக்கத்து ஊரான ஏனாதியை சேர்ந்த இளைஞர்கள் சென்று தாங்கள் ரவுடிகள் என்றும், கடை நடத்த வேண்டுமென்றால் மாமூல் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் மாமூல் தர முடியாது என பிரகாஷ் கூறியதால் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பிரகாஷையும் அவரது தம்பி செந்திலையும் அவர்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால் கூச்சல் எழும்பியதால் அக்கம் பக்கத்தினர் கூடியதால் 4 பேரும் தப்பியோடினர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மளிகை கடை உரிமையாளர் பிரகாஷ் மற்றும் அவருடைய தம்பி செந்தில்குமார் ஆகியோரை மீட்ட பொதுமக்கள் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.