ChatGPT AI மூலம் எழுதப்பட்ட புத்தகங்கள் Amazon, Kindle ஆகியவற்றில் விற்பனை.. எழுத்தாளர்களுக்கு ஆபத்து!

Artificial Intelligence
எனப்படும் AI தொழில்நுட்பம் மூலமாக பலர் சிறு கதைகளை எழுதி அதை Amazon மற்றும் Kindle போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனைக்கு வைத்துள்ளார்கள். வெறும் தலைப்பை மட்டுமே வைத்து Brett Schickler என்பவர் 30 பக்கங்கள் நிறைந்த குழந்தைகள் படிக்கும் சிறு கதையை சில மணிநேரங்களில் எழுதி Amazon.com மூலமாக விற்பனைக்கு வைத்துள்ளார்.

இதன் ebook விலை 250 ரூபாயாகவும், நேரடி புத்தகம் 830 ரூபாய் என்ற விலையிலும் அவர் விற்பனைக்கு வைத்துள்ளார். இதற்காக அவருக்கு ஆகிய மொத்த செலவு 8300 ரூபாய் ஆகும். இது பெரிதாக தோன்றினாலும் இதை வைத்து அவர் தனியாக ஒரு தொழிலையே தொடங்கலாம்.

ChatGPT AI
சென்று ‘ஒரு தந்தை மகனுக்கு பணத்தை எப்படி சேமிப்பது என்று கற்றுத்தருகிறார்’ என்று தலைப்பை கொடுத்தால் போதும் தானாகவே ChatGPT ஒரு கதையை உருவாக்கிவிடுகிறது. இதேபோல எழுதப்பட்ட 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் Amazon மற்றும் Kindle ஆகிய தளங்களில் விற்பனையில் உள்ளது.

இதேபோல ‘How to Write and Create Content Using ChatGPT’, ‘Homework’, ‘Poetry’ போன்ற பல புத்தகங்களும் விற்பனையில் உள்ளன. இந்த ChatGPT மனிதர்களை போலவே புத்தகங்களை எழுதுவதால் எழுத்தாளர்களால் கூட உண்மையான புத்தகம் எது என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஆனால் இதன் உண்மை தன்மை குறித்து சோதனை செய்ய CNET செய்தி நிறுவனம் ChatGPT AI கருவியை சோதனை செய்தபோது அது பல கோடி பக்கங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்து அதில் இருக்கும் எழுத்துக்களை எல்லாம் வைத்து இவ்வாறு எழுதுவதாகவும் அதில் அதிக இடங்களில் திருத்தும் தேவைப்படுவதாகவும், Plagiarism எனப்படும் அடுத்தவர்களை பார்த்து அப்படியே எழுதுவது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உண்மையான எழுத்தாளர்களுக்கு ஆபத்து

ஏற்கனவே Youtube, TikTok, Reddit போன்ற சமூகவலைத்தளங்களில்
ChatGPT AI
மூலம் சில மணிநேரங்களில் புத்தகம் எழுதுவது எப்படி? என்பது போன்ற வீடியோக்கள் பல வெளியாகிய வண்ணம் உள்ளன. இதனால் உண்மையான எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் ஒருவரின் உழைப்பை CHATBOT போன்ற AI சுலபமாக திருடி புத்தகம் எழுதிவிடும் என்று தெரிவிக்கின்றனர்.

இதனால் உண்மையான எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் மற்றும் AI எழுதிய புத்தகங்கள் எது? என்பதை குறிக்கும் விதமாக தனித்தனியாக புத்தகங்கள் இருக்கவேண்டும் என்றும் இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றால் அதிகப்படியான தரம் இல்லாத புத்தகங்கள் பல தொடர்ந்து வெளியாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கையுடன் கூறுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.