Subi Suresh: மீண்டும் ஒரு சோகம்… பிரபல நகைச்சுவை நடிகை திடீர் மரணம்!

பிரபல மலையாள நகைச்சுவை நடிகை திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சுபி சுரேஷ்மலையாள சினிமாவில் நகைச்சுவை நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வந்தவர் சுபி சுரேஷ். பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக இருந்த சுபி சுரேஷ் தனது திறமையால் திரைத்துறையில் தடம் பதித்தார். விஜேவாக இருந்த போதே ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்த சுபி சுரேஷுக்கு, சினிமாவில் நடிக்க தொடங்கிய பிறகு ரசிகர் பட்டாளம் இன்னும் பெருகியது.
​ Mayilsamy, Mano Bala: ‘எனக்கு அந்த தைரியம் இல்ல… சொன்னதை மயில்சாமி கேட்கல’… நொறுங்கிப்போன மனோ பாலா!​
சுபி சுரேஷ் மரணம்இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுபி சுரேஷ், தனது தனித்துவமான நடிப்பால் மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் சுபி சுரேஷ். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சுபி சுரேஷ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
Bayilvan Ranganathan, Goundamani: ‘நீ மட்டும் அந்த நடிகையை தூக்கி’.. கவுண்டமணியின் அந்தரங்கங்களை பச்சையாக கூறிய பயில்வான்!​
முதல்வர் இரங்கல் 42 வயதே ஆன நடிகை சுபி சுரேஷின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை சுபி சுரேஷின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுபி சுரேஷின் மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது இரங்கல் செய்தியில் மலையாள சினிமா நல்ல எதிர்காலம் உள்ள ஒரு கலைஞரை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
​ Mayilsamy, Vivek: அடக் கடவுளே.. இப்படிப்பட்டவரா மயில்சாமி? கலங்க வைக்கும் விவேக்கின் பேச்சு!​
ஆத்மா முக்தி அடையட்டும் இதேபோல் கேரள கவர்னர் ஆரிப் முகமது கானும் சுபி சுரேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டில், “கேரளாவில் பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ஆளுமையாக இருந்த திருமதி சுபி சுரேஷின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா முக்தி அடையட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
​ 52 வயதிலும் அசர வைக்கும் ரம்யா கிருஷ்ணன்!​
தொடரும் மரணங்கள்தென்னிந்திய சினிமாவில் கடந்த சில நாட்களாக மரணங்கள தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல பாடகியாக வலம் வந்த வாணி ஜெயராம் திடீரென மரணமடைந்தார். அவரை தொடர்ந்து பிரபல நடிகராக வலம் வந்த மயில்சாமி மாரடைப்பால் மரணமடைந்தார். இதேபோல் பிரபல தெலுங்கு இயக்குநர் விஸ்வநாத், தெலுங்க நடிகர் தாரக் ராணாவும் சமீபத்தில் மரணமடைந்தனர். அந்த வரிசையில் தற்போது மலையாள நடிகை சுபி சுரேஷ் அகால மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
​ Meena: கணவர் மரணம்… மெல்ல மீண்டு வரும் மீனா… 46 வயதிலும் அள்ளும் ஆழகு!​
subi
கவர்னர் இரங்கல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.