Power Star: பணத்துக்காக சொந்த குடும்பமே கடத்திய அவலம்: பவர் ஸ்டாருக்கு நேர்ந்த கொடுமை.!

பவர் ஸ்டார் என்றால் அனைவருக்கும் தெரியும் அளவிற்கு பிரபலமானவர் ஸ்ரீனிவாசன். கடந்த 2011 ஆண்டு வெளியான ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி, தயாரித்து அதில் தானே ஹீரோவாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பவர் ஸ்டார். சில காமெடியன்கள் எவ்வளவு தான் காமெடி செய்தாலும் நமக்கு கடுப்பு தான் வரும். ஆனால் பவர் ஸ்டார் திரையில் தோன்றினாலே ரசிகர்களுக்கு குபீர் சிரிப்பு வந்துவிடும்.

சந்தானம் நடிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. அந்த படத்தில் பவரை வைத்து சந்தானம் செய்த காமெடி எப்போது பார்த்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் தான் பவர் ஸ்டாரை அதிகம் பேமஸ் ஆக்கியது. இதில் கிடைத்த பிரபலத்தால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார் பவர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து பிக்கப் ட்ராப் என்ற படத்தில் வனிதா விஜயகுமாருடன் இணைந்து நடித்தார் பவர் ஸ்டார். அந்த சமயத்தில் தான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நலம் தேறியுள்ள பவர், தனியார் யூடிப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியை வனிதா விஜயகுமார் தொகுத்து வழங்கியுள்ளார்.

இதில் பேசிய பவர் ஸ்டார் மதுரையில் பிரபலமான அக்கு பஞ்சர் டாக்டராக பணியாற்றி கொண்டிருந்த போது, நம்மோட வாழ்க்கை ஒரு வட்டத்துக்குள்ளே சுருங்குகிறது. இன்னும் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையோட சென்னை வந்துள்ளார். அங்கு வந்த பிறகு ஒரு படத்திற்கு பைனான்ஸ் செய்துள்ளார். அப்போது தான் தானே நடித்தால் என்ன என்ற யோசனையுடன் படம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த படம் தான் ‘லத்திகா’.

Ponniyin Selvan 2:ஹேய் எப்புட்றா… குந்தவையாக மாறிய திரிஷாவின் வேறலெவல் வீடியோ.!

இந்தப்படத்தை திரையரங்கு ஒன்றில் 360 நாட்கள் ஓட வைப்பதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் பவர் ஸ்டார். இந்தப்படத்திற்கு பிறகே நீங்க நெறைய பப்ளிசிட்டி பண்றீங்க எனக்கூறி, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார் சந்தானம். பணம் இருந்த சமயத்தில் தன்னுடன் பலரும் சுற்றிய போது, தனக்கு பின்னாலும் நாலு பேர் இருக்கிறார்கள் என சந்தோஷப்பட்டதாகவும், ஆனால் பணம் போன பிறகு அவர்கள் தன் பக்கம் வராதது குறித்தும் பேசியுள்ளார்.

இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, ஒருநாள் படம் பற்றி பேசுவதற்காக ஹோட்டல் ஒன்றுக்கு வர சொல்லி ஒரு கும்பல் தன்னை கடத்தி சென்றதாக பகீர் தகவலை கூறியுள்ளார். தன்னுடைய சொந்தம் ஒன்றே சொத்துக்காக இந்த கடத்தலை நடத்தியதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். பவர் ஸ்டாரின் இந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Indian 2: விக்ரமை தூக்கி சாப்பிட போகும் ‘இந்தியன் 2’: வெறித்தனம் காட்டும் ஆண்டவர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.