காட்டுத் தீயை அணைக்க, மலை மீது ஏறும்போது தவறி விழுந்த வேட்டைத்தடுப்பு காவலர் படுகாயம்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில், காட்டுத்தீயை கட்டுப்படுத்த சென்ற வேட்டை தடுப்பு காவலர், மலை மேல் ஏறும் போது தவறி பாறை மீது விழுந்ததில் படுகாயமடைந்தார்.

ஆசனூர் மலைப்பகுதியைச் சேர்ந்த ஆனந்த், அதே பகுதியில் வேட்டைத்தடுப்பு காவலராக பணியாற்றி வந்தார்.

அரேப்பாளையம் அருகே, நேற்று  வனப்பகுதியில் காட்டுத் தீ பரவிய நிலையில், அதனை கட்டுப்படுத்த,  ஆனந்த உட்பட வேட்டைத்தடுப்பு காவலர்கள் குழுவாக சென்றனர்.

அடர் வனப்பகுதியில், மலை மீது ஏறும் போது, ஆனந்த் எதிர்பாராத விதமாக கீழே இருந்த பாறையில் தவறி விழுந்ததில், தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.