திண்டுக்கல்லில் பயங்கரம்.! கழுத்தறுத்து கட்டிடத்தொழிலாளி கொடூர கொலை.!

திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளி கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கலிக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டிடத்தொழிலாளி தர்மராஜ் (45). இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தர்மராஜ் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து தர்மராஜ், இன்று காலை வசந்த் நகர் தனியார் கல்லூரி அருகே முகம் சிதைந்து, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

மேலும் அவருக்கு மேல் இருசக்கர வாகனம் கிடந்துள்ளது. இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த தர்மராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மராஜை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.