மகாராஷ்டிராவில், 15 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

மகாராஷ்டிராவில், 15 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஆறு வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள கோபர்டி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அங்கிருந்த திறந்தவெளி போர்வெல் கிணற்றில் தவறி விழுந்தான்.

தகவலறிந்து சம்ப வ இடத்திற்கு விரைந்த தேசிய மீட்பு படைக் குழுவினர், ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணி நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள் குழு தயார் நிலையில் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.