கிருஷ்ணகிரி கொடூரம்! காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை

Crime News: கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் வயது 28 இவர் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இந்த காதல் திருமணத்தை பெற்றோருக்கு பிடிக்காத நிலையில், இன்று மதியம் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து டைல்ஸ் வேலை செய்வதற்கு காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெகனை வழிமறித்த அவரது மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்களோடு ஜெகனை வழிமறித்து அவனது கழுத்தை கத்தியால் அறுத்து உள்ளனர்.

இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையறிந்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து பார்க்கும்போது சங்கர் மற்றும் அவருடன் வந்த நபர்கள் தப்பித்து ஓடி விட்டனர். 

இந்த கொடூரக்கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் டேம் ரோடு பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.