இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா – எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 1,134 ஆக இருந்த நிலையில் இன்று 1300 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நாடுமுழுவதும் 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டது. இந்நிலையில் மேலும் அதிகரித்து இன்றைய தினம் 1300 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று நாடு முழுவதும் 89, 078 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தபட்டதில் 1,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. ஆகவே, சமூக இடைவெளியும், முக்கவசமும் அவசியம் அணிதல் வேண்டும்.
image
மேலும், 718 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.46 சதவீதம் ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.08 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் தற்போது 7,605 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.02 சதவீதமாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.