அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டிஸ்; ராகுலுக்கு மேலும் ஒரு சிக்கல்.!

காங்கிரஸின் ராகுல் காந்தி கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தங்கியுள்ள தனது துக்ளக் லேன் பங்களாவை காலி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு அரசு இல்லத்தில் இருந்து வெளியேற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கின்றார்கள் என ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் மீது குஜராத் முன்னாள் அமைச்சர் ஓபிசி மக்களை அவமதித்து விட்டதாக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்தசூழலில் கடந்த 23ம் தேதி சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒரு எம்பிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், அவரை தகுதி நீக்கம் செய்யலாம் என்ற விதி உள்ளது. அதன்படி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது. மேலும் 8 ஆண்டுகள் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதும் குறிப்பிடதக்கது.

ஆனால் அதானி முறைகேட்டில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியதால், அவரை முடக்க ஒன்றிய பாஜக முடிவு செய்து இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக
காங்கிரஸ்
தெரிவித்துள்ளது. மேலும் அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதியை மாற்றி பாஜக சார்பு நீதிபதியை வைத்து ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்தநிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு நாளில் அவரின் அரசு இல்லத்தை விட்டு வெளியேறும் படி அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. “இது பாஜக அரசிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஏனெனில் பாஜக சூனிய வேட்டையில் ஈடுபட்டுள்ளது” என்று காங்கிரஸ் எம்பியும் அதன் தேசிய செய்தித் தொடர்பாளருமான டாக்டர் நசீர் ஹுசைன் கூறினார்.

“எதிர்ப்புக் குரல்களை அடக்க அவர்கள் எல்லாவிதமான தந்திரங்களையும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் நமது முக்கியமான தலைவர்களில் ஒருவரை வஞ்சகமான வழிகளில் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றிவிட்டனர், இது ஒன்றும் புதிதல்ல,” என்று அவர் கூறினார்.

“இசட்-பிளஸ்” பாதுகாப்பைப் பெறுபவர் என்பதால், அரசாங்கத்தால் வழங்கப்படும் தங்குமிடத்தில் ராகுல் காந்திக்கு உரிமை உண்டு என்பதால், வெளியேற்றத்தில் பல சிக்கல்கள் இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

“அவர் ஒரு சிறப்புப் பாதுகாவலர் என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். அவர் வேறு இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன், அவர் இங்கு தங்க ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். அடுத்த என்ன நடக்கும் என்பதை ராகுல் காந்தி எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து தான் அமையும்,” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஹுசைன் கூறினார்.

‘ராகுல் காந்திக்கு இது அதிகம்..’ – வாஜ்பாயை மேற்கோள் காட்டிய பிரசாந்த் கிஷோர்.!

ராகுல் காந்தி தனது பங்களாவை காலி செய்ய ஏப்ரல் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. “அரசியல் அமைப்பு, சட்ட அமைப்பில் எது ஏற்கத்தக்கது என்பது உங்களுக்குத் தெரியும். அவர் (ராகுல் காந்தி) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். பின்னர், தானியங்கி நடைமுறைகள் உள்ளன” என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.