அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இரு பங்களாதேஷ் பிரஜைகள் கைது!


போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள்  குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும்  ஸ்ரீலங்கன் விமான சேவையில் டுபாயில் இருந்து இன்று காலை வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இரு பங்களாதேஷ் பிரஜைகள் கைது! | Two Bangladeshis Caught At Bia With Forged Visas

இலத்திரனியல் விசா

இதன்போது அவர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கான ஆவணங்களை விமான நிலைய குடிவரவு அதிகாரியிடம் வழங்கியபோது, அவை போலியானவை என்பதை அந்த அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

அத்துடன், குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலத்திரனியல் விசாக்களையும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.