ஹோட்டலே இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உணவு வழங்கியதாக பில்.. ஓ.பி.எஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சு பதில்..!

கொரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உணவு வழங்கிய உணவகங்களுக்கான கட்டணம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் இன்னும் வழங்கப்படவில்லை என சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அநியாயமான வகையில் கொடுக்கப்பட்ட பில்களை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். நியாயமான வகையில் இருந்த பில்கள் செட்டில் செய்யப்பட்டுவிட்டதாகவும், ஹோட்டலே இல்லாமல் உணவு வழங்கியதாக கொடுக்கப்பட்டுள்ள பில்கள் தான் செட்டில் செய்யவில்லை எனவும் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.