Vignesh Shivan:தல மீது விக்னேஷ் சிவனுக்கு தான் எம்புட்டு பாசம்: போட்டோ பார்த்தீங்களா?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Vignesh Shivan love for thala: தல மீது தனக்கு இருக்கும் பாசத்தை மீண்டும் நிரூபித்துவிட்டார் விக்னேஷ் சிவன் என்கிறார்கள் ரசிகர்கள்.

​தல​சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த கூல் கேப்டன் தோனியை தமிழக ரசிகர்கள் அன்புடன் தல என்று அழைக்கிறார்கள். அப்படி அழைப்பது தோனிக்கே மிகவும் பிடித்திருக்கிறது. தமிழக மக்கள் என்னை தலனு தான் கூப்பிடுவாங்க தெரியுமா என பேட்டிகளில் பெருமையாக தெரிவித்தார் தோனி. அந்த தல மீது அன்பான இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் தனி பாசம் உண்டு.
​சேப்பாக்கம்​16வது ஐபிஎல் போட்டிகள் துவங்கவிருக்கும் நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டியேத்தில் இருக்கும் சேர்களுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடித்தார் தோனி. அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவிட்டது. தல போல வருமா என கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

​விக்னேஷ் சிவன்​
சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தோனி பெயிண்ட் அடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதை பார்த்த ரசிகர்களோ, தல மீது தான் விக்னேஷ் சிவனுக்கு எவ்வளவு பாசம் என நெகிழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
​அஜித்​Vignesh Shivan: இந்த சோகத்திலும் அஜித் சொன்னதை மட்டும் மறக்காத விக்னேஷ் சிவன்விக்னேஷ் சிவனுக்கு தல தோனி மீது மட்டும் அல்ல தல அஜித் குமார் மீதும் பாசம் உண்டு. இந்நிலையில் தான் அஜித்தின் ஏ.கே. 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என துள்ளிக்குதித்தார் விக்னேஷ் சிவன். ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டது. கடைசி நேரத்தில் ஏ.கே. 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள்.

​ஏ.கே. 62​விக்னேஷ் சிவனின் கதை பிடிக்கவில்லை என்று கூறி அவரை நீக்கிவிட்டார்கள். லண்டன் சென்று லைகாவிடம் பேசியும் பலனில்லை. இதுவும் கடந்து போகும் என்று இருக்கிறார் விக்னேஷ் சிவன். இன்ஸ்டா ஸ்டோரீஸில் அவர் போடும் தத்துவங்களை பார்க்கும்போது ஏ.கே. 62 பட வாய்ப்பு பறிபோன கவலையில் தான் அவர் இன்னும் இருக்கிறார் போன்று என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

​நயன்தாரா​Nayanthara: முதலில் விவாகரத்து, இப்போ இதுவா?: அது ஏன் நயன்தாராவுக்குனே இப்படி நடக்குது!அஜித் பட வாய்ப்பு போனால் என்னவென்று விஜய் சேதுபதியிடம் டேட்ஸ் வாங்கிக் கொடுத்தார் நயன்தாரா. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்குகிறார் விக்னேஷ் சிவன் என தகவல் வெளியானது. இதற்கிடையே ஷுப் யாத்ரா என்கிற குஜராத்தி மொழி படத்தை தயாரித்திருக்கிறார் விக்கி. குழந்தைகள், கெரியர் என பிசியாக இருந்தாலும் அஜித் பட வாய்ப்பு கை நழுவியதை மட்டும் விக்னேஷ் சிவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போன்று என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.