சென்னை: அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று (ஏப்.2) மாலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் உள்ள எல்இடி பெயர் பலகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 12வது மாடியின் மேல்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரம் நடைபெற்று வருகின்றன. மேலும், திருவல்லிக்கேணி, எழும்பூர், ஆகிய இடங்களில் இருந்தும் தீயணைக்கும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.