திருமண கனவில் இருந்த யுவதி – எதிர்பாராத வகையில் பறிக்கப்பட்ட உயிர்


கொழும்பு – கண்டி செல்லும் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

திருமண கனவில் இருந்த யுவதி - எதிர்பாராத வகையில் பறிக்கப்பட்ட உயிர் | Young Girl Dies In A Accident

தேவையின் நிமித்தம் வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளிற்கு அருகில் நின்ற யுவதி உயிரிழந்துள்ளார்.

​​

அதிவேகமாக கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளின் அருகில் நின்றிருந்த யுவதி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்தி பேருந்து இராணுவத்தினரை ஏற்றிச் செல்ல பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இளம் காதலர்களுக் விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், யுவதி துரதிஷ்டவசமாக உயிரிந்தமை பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.

You may like this video




Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.