நேபாளத்தில் பாறையில் இருந்து தவறி விழுந்து இந்தியர் உயிரிழப்பு

காத்மாண்டு,

கிழக்கு நேபாளத்தின் பஞ்ச்தார் மாவட்டத்தில் 34 வயதான இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

பிக்ரம் சகாப்த நாட்காட்டியின்படி நேபாளத்தில் வெள்ளிக்கிழமை புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சிக்கிம் மாநிலத்தில் வசிக்கும் கேசவ் குருங் என்பவர் நேபாள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தனது நண்பர்கள் 4 பேருடன் கிழக்கு நேபாளத்தில் உள்ள சுற்றுலாத் தலமான சிவா பன்ஜியாங்கிற்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அங்கிருந்து திரும்பும் போது மலையிலிருந்து கீழே விழுந்ததில் குருங் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.