வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையில் உள்ள சீதை கோவில் நினைவாக சிறப்பு தபால் உறையை, அந்நாட்டு பிரதமர் தினேஷ் குணவர்தனே நேற்று வெளியிட்டார்.
நம் அண்டை நாடான இலங்கையின் நுவரொ லியா மாவட்டத்தில், சீதைக்கு கோவில் உள்ளது. ராமாயணத்தில், சீதையை ராவணன் அடைத்து வைத்ததாக கூறப்படும் அசோக வனம் இங்கு உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலின் நினைவை போற்றும் விதமாக சிறப்பு தபால் உறை நேற்று வெளியிடப்பட்டது. இதை இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனே வெளியிட்டார்.
மேலும், அசோக வனத்தில் தியான மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல்லையும் நாட்டினார். இந்த நிகழ்வில் பிரதமருடன், இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாகலே பங்கேற்றார்.
இந்த தியான மண்டபம், இந்தியா மற்றும் பிற பகுதிகளில் இருந்து இலங்கை செல்லும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என, அந்நாட்டு அரசு உறுதியாக நம்புகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement