சென்னை பாஜக பிரமுகரை கொலை செய்தது ஏன்? சரணடைந்த 9 கொலையாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்!

சென்னை பூவிருந்தவல்லியில் பாஜக மாநில நிர்வாகி சங்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் 9 பேர் சரணடைந்துள்ளனர்.

சென்னை, பூந்தமல்லியில் பாஜகவைச் சேர்ந்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பிபிஜி சங்கர் கொல்லப்பட்ட விவகாரத்தில், சென்னை எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு 9 பேர் சரணடைந்துள்ளார். 

சுமார் 20 – 25 வயது மதிக்கத்தக்க 9 பேர், எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு சரணடைந்துள்ளனர்

நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்ட சங்கர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், தொழில் போட்டியில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி கரணம் வெளியாகியுள்ளது.

கொலையாளிகள் சரத், சங்க குமார், ஜெயன், சஞ்சீவ், குணா, சந்தான குமார், தினேஷ், உதயகுமார், ஆனந்த் ஆகிய 9 பேர் சரணடைந்துள்ளனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.