கங்குலிக்கு மல்யுத்த வீராங்கனை பதிலடி!!

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து தெரியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியிருந்த நிலையில், அதற்கு மல்யுத்த வீராங்கனை பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜக எம்.பி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி,மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து னக்கு தெரியாது என்றார்.

அது அவர்கள் யுத்தம் என்பதால், அவர்களே சண்டையிடட்டும். விளையாட்டு உலகில் முழுமையாகத் தெரியாத விஷயத்தை பற்றிப் பேசக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கங்குலியின் இந்த கருத்துக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், ஒரு விளையாட்டு வீரராக மற்றும் அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள விரும்பினால் அவர் இங்கு வரட்டும்.

நீதியை நிலைநாட்ட அவர் எங்களுக்கு ஆதரவளிக்க விரும்பினால், அவர் ஒரு வீரராக ஜந்தர் மந்தருக்கு வந்து எங்களிடமிருந்து எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.