உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் சிறை செல்வீர்கள்! உஷார்

ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அது பல இடங்களில் தேவைப்படுகிறது. புதிய மொபைல் இணைப்பு பெறுவது முதல் அரசின் எந்த ஒரு திட்டத்தின் பலனையும் பெறுவதற்கும் ஆதார் அட்டை இல்லாமல் எந்த வேலை செய்ய முடியாது. இருப்பினும், வேறொருவரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவது அல்லது உங்கள் ஆதாரை தவறாகப் பயன்படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது தவிர, ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் அட்டைகள் செய்திருந்தாலும், உங்கள் மீது நடவடிக்கை நிச்சயம்.

ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்துவது அல்லது மோசடி செய்வது சட்டவிரோதமானது என்பதும், அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதும் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தினால் என்ன மாதிரியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆதார் அட்டை மோசடி ; அதற்கான தண்டனை விவரங்கள்

– ஆதார் பதிவு செய்யும் போது தவறான தகவல்களை வழங்கினால், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ 10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

– இது தவிர, ஆதார் அட்டை வைத்திருப்பவரின் பயோமெட்ரிக் அல்லது மக்கள்தொகை விவரங்களை தவறாகப் பயன்படுத்தினால் அல்லது மாற்றினால், அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ. 10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 – ஒரு நிறுவனம் அல்லது ஏஜென்சி மோசடியாக ஆதார் அட்டை தொடர்பான தகவல்களை சேகரிப்பது சட்டவிரோதமானது. அவ்வாறு செய்தால், ஒரு நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 வரை அபராதம் அல்லது நிறுவனத்திற்கு ரூ.1.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

– ஆதார் அட்டைக்கு தேவையான தகவல்கள் சேகரிப்பின்போது சேகரிக்கப்பட்ட தகவலைப் பகிர்ந்து அல்லது விற்பனை செய்தால், எந்தவொரு நபரும் அல்லது முகவரும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ 10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அதே நேரத்தில், நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், ஹேக்கிங் அல்லது தவறான முறையில் ஆதார் டேட்டாவை அணுகுவது அல்லது டேட்டா திருடப்பட்டால், அவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதைச் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், கடுமையான அபராதமும் விதிக்கப்படலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.