நான்காவது ரி20 போட்டியிலும் இலங்கை வளர்ந்து வரும் அணி 45 ஓட்டங்களால் வெற்றி

ஜப்பான் தேசிய அணியுடனான நான்காவது ரி20 போட்டியிலும் இலங்கை வளர்ந்து வரும் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை 4–0 என முன்னிலை பெற்றுள்ளது.

சனோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (14) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.

இதன்பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்பான் அணி 18.4 ஓவர்களில் 86 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பாக ஜப்னா கிங்ஸ் அணி வீரர் தீசன் விதூஷன் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெலோன் பீரிஸ், சிதும் திஸாநாயக்க மற்றும் லக்ஷான் கமகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ரி20 போட்டி இன்று (15) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.