பரபரப்பு! கூலித் தொழிலாளி கல்லால் அடித்து கொலை!!

சேலம் அருகே கூலித்தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னம்மாப்பேட்டை அருகே செங்கல் அணை பகுதியைச் சேர்ந்த ராஜகணபதி (47) என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனா 15 வருடத்திற்கு முன்பு தனியே சென்று விட்டார்.

இதனால் ராஜகணபதி அவரது அண்ணன் செல்வம் வீட்டில் வசித்து வந்தார். கீழ் வீட்டில் ராஜகணபதியும் மேல் மாடியில் அண்ணன் செல்வமும் வசித்து வந்தனர். இந்நிலையில் ராஜகணபதி வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

பின்னர் ராஜகணபதியின் அண்ணன் செல்வம் மற்றும் அவரது மனைவி ஆகியோரை அழைத்துச் சென்று விசாரித்தனர். செல்வத்தின் மனைவி தேவி நேற்று அம்மாப்பேட்டை காவல் நிலையம் புகார் மனு கொடுத்தார்.

அதில் ராஜகணபதி மது குடித்துவிட்டு வந்து தினமும் தகராறு செய்வதாகவும், அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ராஜகணபதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சொத்து தகராறில் ராஜகணபதி கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் துப்பு துலங்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.