‘சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார்’ – அமைச்சரின் பேச்சால் டி.கே.சிவகுமார் அதிருப்தி

பெங்களூரு: கர்நாடகவின் முதல்வராக சித்தராமையாவே 5 ஆண்டுகளுக்கும் நீடிப்பார் என அமைச்சர் எம்.பி. பாட்டீல் பேசியதால், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் மேலிடம் அளித்த ரகசிய வாக்குறுதிகளின் அடிப்படையில் டி.கே.சிவகுமார் துணை முதல்வர் பதவியை ஏற்றார். சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும், டி.கே.சிவகுமார் இரண்டரை ஆண்டுகளும் முதல்வர் பதவியில் இருப்பார்கள் என தகவல் வெளியானது.

இது குறித்து செய்தியாளர்கள் கர்நாடக அமைச்சர் எம்.பி. பாட்டீலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ”சித்தராமையா 5 ஆண்டுகளுக்கும் முதல்வராக நீடிப்பார். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு வேறொருவர் முதல்வராக பதவியேற்க வாய்ப்பு இல்லை. அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் எதுவும் தெரிவிக்கவில்லை” என்றார்.

இந்த பதிலால் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அவர் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான வேணுகோபால், ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.