டாஸ்மாக்கில் 10 ரூபாய் வசூல்… வெளிப்படையான உத்தரவு போட ஏன் தயக்கம்?

அரசு மதுபான கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்யப்படுவதாக நீண்ட நாட்களாக குற்றசாட்டு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுகுறித்து வெளிப்படையாக ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்கப்படாமல் இருந்து வந்தது. அதே சமயம், விலையை ஏற்றினாலும் மற்ற மாநிலங்களை போல தரமான மது கிடைப்பதில்லை என்றும் புகார் உள்ளது.

அதுகுறித்து டாஸ்மாக் ஊழியரிடம் கேட்டால் அவர்கள் வாக்குவாதம் செய்வதாகவும் ‘இஷ்டம் இருந்தா வாங்கு இல்லனா கிளம்பு’ என்று தெனாவட்டாக பதில் அளிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், மது பிரியர்கள் வாக்குவாதம் செய்யும்போது ‘ அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மாதா மாதம் கமிஷன் கட்ட வேண்டி உள்ளதால் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கி சமாளிப்பதாக ஊழியர்கள் பேசும் வீடியோக்களும் அண்மையில் வெளியாகின.

இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பத்திரிகையாளர்கள் வெளிப்படையாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ‘ எந்த கடையில் அப்படி வாங்கினார்கள்? தமிழ்நாட்டில் உள்ள எல்லா கடைகளுக்கும் நீங்கள் என்று வாங்கியுள்ளீர்களா என்று குதர்க்கமாக கேள்வி எழுப்பி கடந்து சென்றார்.

அதனை தொடர்ந்து மாவட்ட அளவிலான மது விலக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய செந்தில் பாலாஜி, வழக்கமான ஒரு சில அறிவுரைகளை வழங்கினார். ஆனால், எந்த கடையிலும் மது பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தவில்லை. இது குறித்து ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தால் டாஸ்மாக் கடைகளில் அமைச்சரின் உத்தரவை மேற்கோள்காட்டி மது பிரியர்கள் வாக்குவாதம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆனால், பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு எழுத்துபூர்வமான உத்தரவை அமைச்சர் பிறப்பிக்கவில்லை. இருப்பினும், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு எதிராக மது பிரியர்கள் பரவலாக கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இனிமேலாவது பூசி முழுகாமல் கண்டிப்பான உத்தரவை அமைச்சர் பிறப்பித்து 10 ரூபாய் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.