வருங்கால கணவருடன் காரில் சென்ற போது பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்: கண்ணீரில் திரையுலகம்.!

பாலிவுட் சினிமாவில் சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவர் வைபவி உபாத்யாயா. இவர் தனது வருங்கால கணவருடன் சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கில் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பாலிவுட்டில் ‘சாராபாய் Vs சாராபாய் என்ற சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் வைபவி உபாத்யாயா. இரண்டு சீசன்களாக ஒளிப்பரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடந்து வெள்ளித்திரையில் தீபிகா படுகோனேவுடன் இணைந்து ‘சப்பக்’ என்ற படத்திலும், அண்மையில் ரிலீசான ‘டிமிர்’ என்ற படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வைபவி தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள குலு மணாலிக்கு சுற்றுலா சென்ற போது , இவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு ஒன்றில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் வைபவி தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Leo: பான் இந்தியா வேண்டாம்ப்பான்னு சொன்ன தளபதி: சம்மதிக்க வைத்த லோகேஷ்.!

அவரது வருங்கால கணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கி வைபவி உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பாலிவுட் மற்றும் சின்னத்திரை திரையுலகினர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், வைபவி உபாத்யாயா உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sarath Babu: சரத்பாபுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கமல் ஏன் வரவில்லை.?: விளக்கமளித்த சுஹாசினி.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.