New parl., no bar to opening: Supreme Court | புதிய பார்லி., திறப்புக்கு தடையில்லை: சுப்ரீம்கோர்ட் பச்சைக்கொடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: புதிய பார்லி., திறப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்தது. வரும் 28 ம் தேதி புதிதாக கட்டப்பட்டுள்ள பார்லி., கட்டடம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படுகிறது.

இதனை எதிர்த்தும் ஜனாதிபதிதான் திறக்க வேண்டும் என வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் சுகின் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.கே. மகேஸ்வரி , பிஎஸ் நரசிம்ஹா ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது.

இது என்ன மனு என நீதிபதிகள் கோபமுற்றதுடன், ஒரு நிகழ்வில் திறப்பு விழா குறித்த விஷயத்தை தொடர்பு படுத்த முடியாது. பார்லி., திறப்பு விழா விஷயத்தில் கோர்ட் தலையிட விரும்பவில்லை . இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.