சிறுவனை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆசிரியர்!!

வீட்டுப் பாடத்தை முடிக்காததால் பள்ளி ஆசிரியர், 6 வயது சிறுவனை மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கிழக்கு சம்பரான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர் என்று கூறப்படுகிறது. இவர் 1-ம் வகுப்பு படிக்கும் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறார்.

இந்த சூழலில் குழந்தைகள் வீட்டு பாடத்தை சரியாக முடிக்காமல் வந்துள்ளனர். மறுநாள் ஆசிரியர் வீட்டு பாடம் குறித்த கேள்வி கேட்கவே, அதில் 6 வயது சிறுவன் ஒருவன் வீட்டு பாடத்தை முடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஆசிரியர் சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் சிறுவனை மாடிக்கு கூட்டி சென்று அங்கே வைத்தும் தாக்கியதோடு கீழே வீசியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

சிறுவனை அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றதோடு சிறுவனின் உறவினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த உறவினர்கள் காவல்துறைக்கு புகார் கொடுத்தனர்.

இதையடுத்து ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.