சென்னை: திமுக அரசு பதவி ஏற்றபிறகு, ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் விமர்சிக்கும் நபர்களை காவல்துறையைக்கொண்டு நள்ளிரவு கைது செய்யப்படும் சம்பவம் நடந்தேறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பிரபல பத்திரிகையாளரும், யுடியூபருமான சவுக்கு சங்கர் நள்ளிரவில் காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் சவுக்கு சங்கர் பேசியதாக கூறப்படுகிறத. இந்த விவகாரத்தில் அவர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, நள்ளிரவு கைது செய்யப்பட்டு உள்ளார். நேற்று […]