`மல்யுத்த வீராங்கனைகள் நாட்டின் ஹீரோக்கள் என்பதை நினைவூட்டுகிறேன்' -டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி

பாலியல் வழக்கில் பா.ஜ.க எம்பியை கைது செய்யக்கோரி, மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றட்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளை காவல் துறையினர் கைது செய்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி, பலரின் கண்டனத்தையும் பெற்றது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் வீராங்கனைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ் பூஷண் சரண் சிங்கை உடனடியாக கைது செய்யுமாறு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவிற்கு கடிதம் எழுதி உள்ளார்.

கைது செய்யப்படும் வீராங்கனைகள்

அதில், “ஒரு மாதத்திற்கு முன்பு, இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சிங் மீது ஒரு மைனர் உட்பட பல மல்யுத்த வீரங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஏற்கனவே 40 கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு அவர் மீது இரண்டு எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்தது.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரால்  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஒரு மைனர் உட்பட பல பெண்களால் குற்றம் சாட்டப்பட்ட போதிலும், டெல்லி காவல்துறை அவரை இன்றுவரை கைது செய்யவில்லை. இதனால் பெண் மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டெல்லியில், ஒவ்வொரு நாளும் 6 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. ஒவ்வொரு வழக்கிலும், குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்ய டெல்லி காவல்துறை முயற்சிக்கிறது. பிறகு ஏன் பிரிஜ் பூஷன் சிங் இன்றுவரை கைது செய்யப்படவில்லை? இது அப்பட்டமான அநீதி இல்லையா? 

குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவாகக் செயல்படும் டெல்லி காவல்துறையின் வெளிப்படையான பாகுபாடான அணுகுமுறை நீதியை கேலிக்கூத்தாக்கியது. மேலும் பெண் மல்யுத்த வீரர்களை டெல்லி தெருக்களில் உட்கார வைத்து தூங்க வைக்கிறது. 

கைது செய்யப்படும் வீராங்கனைகள்

முன்னெப்போதும் இல்லாத வகையில், இன்று மல்யுத்த வீராங்கனைகள் அவர்களது குடும்பத்தினருடன், டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் சங்கீதா போகட் இந்த நாட்டின் ஹீரோக்கள் மற்றும் சாம்பியன்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக அவர்களுக்கு நீதியை மறுப்பதன் மூலம், வலுக்கட்டாயமாக காவலில் வைப்பதன் மூலம், டெல்லி காவல்துறை இந்த நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்களுக்கு எதிராக புகாரளிப்பதற்கும் நீதிக்காகப் போராடுவதற்கும் எதிராக மனச்சோர்வை அளிக்கிறது.

பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்பட்டு, மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.