300 அடி மலை உச்சியிலிருந்து பாறைகள் மீது தவறி விழுந்த நாய்..

அமெரிக்காவின் ஆரிகான் மாநிலத்தில் மலை உச்சியிலிருந்து தவறி பாறைகள் மீது விழுந்த நாயை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

சுற்றுலா பயணி ஒருவர் மலை உச்சியில் தனது ஜெர்மன் ஷெப்பர்டு நாயுடன் விளையாடியபோது அது கால் இடறி, 300 அடி ஆழத்தில் கடலை ஒட்டியுள்ள பாறைகள் மீது விழுந்தது.

காயமடைந்த நாய், கால்நடையாக சென்றடைய முடியாத பாறைகள் நிறைந்த பகுதியில் பரிதவித்தபடி நின்றது. தகவலறிந்து வந்த கடலோர காவல்படையினர், ஹெலிகாப்டரிலிருந்து  ஸ்டிரெட்சருடன் இறங்கி நாயை மீட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.