சிறுமி அளித்த பொய்யான புகார்… பெற்றோர் மற்றும் குடியிருப்புவாசிகள் டெலிவரி பாய் மீது சரமாரித் தாக்குதல்

பெங்களூரில் 8 வயது சிறுமியின் பொய்யான புகார் காரணமாக உணவு டெலிவரி செய்ய வந்த நபர் குடியிருப்பு வாசிகளால் அடித்து உதைத்து தாக்கப்பட்டார்.

தன்னை வலுக்கட்டாயமாக மாடிக்குக் கொண்டுசென்றதாகவும் தான் அவர்கையைக் கடித்து தப்பி வந்ததாகவும் சிறுமி கூறியதால் ஆத்திரம்அடைந்த பெற்றோர் மற்றும் குடியிருப்பு வாசிகள் உணவு டெலிவரி ஏஜன்ட்டை சரமாரியாகத் தாக்கினர்.

ஆனால் விசாரணையில் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்த போது சிறுமி தானாகவே மாடிக்கு சென்று விளையாடியதும் பெற்றோர் கண்டிப்புக்கு பயந்து டெலிவரி ஏஜன்ட் மீது பழியைப் போட்டதும் புலனாகியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.