கன்னியாகுமரி : பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி – நடந்தது என்ன?

கன்னியாகுமரி : பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி – நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் படித்து வருகிறார். 

இந்த நிலையில், இந்த மாணவி இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார். அங்கு திடீரென தான் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை அதிக அளவுச் சாப்பிட்டு சில நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த பள்ளி ஆசிரியர்கள் அந்த மாணவியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் குரித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்கள் அப்பகுதியில் குவிந்தனர். 

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் தற்கொலை முயற்சிக்கு பள்ளியில் இருந்து வந்த அழுத்தம் ஏதும் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.